சென்னை.! மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

சென்னை ஜி.கே.எம் காலனியை சேர்ந்தவர் தொழிலாளி கார்த்திகேயன்(40). இவருடைய மனைவி மோகனமணி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று கார்த்திகேயன், பெரம்பூர் மெயின் ரோட்டில் உள்ள முருகேசன் என்பவர் வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தார். பின்பு தொட்டியில் இருந்த அழுக்கு நீரை வெளியேற்றுவதற்கு மோட்டார் ஸ்விட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் கார்த்திகேயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Worker killed electrocuted in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->