செங்கல்பட்டு: மின்சாரம் பாய்ந்து பெண் பலி - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பூங்குன்றம் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி (46). இவர் நேற்று முன்தினம் தண்ணீர் பிடிப்பதற்காக மோட்டர் சுவிட்சை போட்டுள்ளார்.

அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென மின்சாரம் தாக்கி மகாலட்சுமி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் மகாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே மகாலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மறைமலைநகர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A women killed electrocuted in Chengalpattu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->