தென்னைமரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு குத்து.! யார் மனசும் நோகாமல் வாக்களித்த நபர்...!! - Seithipunal
Seithipunal


உள்ளாட்சி தேர்தலில் எல்லா சின்னங்களிலும் வாக்களித்த வாக்குசீட்டு சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

 இன்று காலையில் இருந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு வாக்கு சீட்டில் இருந்த ஐந்து சின்னத்தில் நான்கு சின்னங்களுக்கு ஒரு நபர் வாக்களித்துள்ளார்.  

இந்த வாக்குசீட்டை திரைப்படம் ஒன்றில் வடிவேலுவிடம் தென்னைமரத்துல ஒரு குத்து... ஏணியில ஒரு குத்து என வாக்களித்து விட்டு வருபவர் சொல்வது போன்ற காட்சியுடன் ஒப்பிட்டு நெட்சினங்கள் பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A voter voting All parties


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->