#தென்காசி || நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து.! வியாபாரி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தென்காசியில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்துள்ளார்.

தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள நைனாபுரத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி மாடசாமி(32). இவருடைய மனைவி ராமசீதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாடசாமி, இன்று காலை டீக்கடை ஒன்றிற்கு பால் ஊற்றிவிட்டு இரு சக்கர வாகனத்தில் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த மாடசாமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மாடசாமி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து வந்த சங்கரன்கோவில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A twowheeler collided with a stationary truck in thenkasi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->