தண்டவாளத்தை கடக்க முயன்றவருக்கு நிகழ்ந்த விபரீதம்.. ராஜபாளையத்தில் நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


தண்டவாளத்தை கடக்க முயன்ற கூலி தொழிலாளி ரயில் மோதி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் கந்தவேல். இவருக்கு திருமணமாகி மரகத வள்ளி என்ற மனைவி இருக்கிறார். கட்டிட தொழிலாளியான கந்தவேல் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்நிலையில், புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள ஐஎன்டியூசி பின்புறத்தில் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற சடலத்தைக் கண்ட போது அது காணாமல் போன கந்தவேல் என்பது தெரியவந்தது. இரவில் ரயில் தண்டவாளத்தை கடந்தபோது அவர் ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அவன் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A train collided with a man trying to cross the tracks


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->