வேலூர் அருகே சோகம்: நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரகாஷ் (48) தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏரிபுதூர் பகுதியில் கெங்கை அம்மன் கோவில் அருகே உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அப்பொழுது அனைவரும் குளத்தில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு பிரகாஷ் நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்த நண்பர்கள் உடனடியாக நீரில் மூழ்கிய பிரகாஷை மீட்டனர்.

ஆனால் பிரகாஷ் நீரில் மூழ்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person who went fishing drowned pond in Vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->