படியில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை.! பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயம்.!
A government school teacher injured after traveling step fell from the bus in virudhunagar
விருதுநகர் மாவட்டத்தில் பேருந்து படியில் பயணம் செய்த அரசு பள்ளி ஆசிரியை தவறி விழுந்து காயம் அடைந்துள்ளார்.
விருதுநகர் கட்டபொம்மன் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வளர்மதி(51) மலைப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலை மலைப்பட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் டவுன் பஸ்ஸில் ஏறியுள்ளார்.
அப்பொழுது பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உள்ளே செல்ல முடியாமல் வளர்மதி படியிலே நின்று பயணம் செய்துள்ளார். இதையடுத்து பேருந்து மழை பொட்டி அருகே சென்ற போது திடீரென கைப்பிடி நழுவி வளர்மதி கீழே தவறி விழுந்துள்ளார்.
இதில் காயமடைந்த வளர்மதியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் கூடுதல் பேருந்துகள் இல்லாததே அருப்புக்கோட்டை பகுதியில் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது என்றும், விபத்துக்களை தடுக்க கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள் விடுத்துள்ளனர்
கடந்த மாதம் அருப்புக்கோட்டையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
A government school teacher injured after traveling step fell from the bus in virudhunagar