தாய், தங்கையை அனுதினம் அடித்து சித்ரவதை.. போதை தந்தையை போட்டுத்தள்ளிய மகன்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி விசூர் காலனி பகுதியை சார்ந்தவர் சவுந்தர பாண்டியன் (வயது 44). இவர் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி சரளா (வயது 38). இவர்கள் இருவருக்கும் அலெக்ஸ் பாண்டியன் என்ற 21 வயது மகனும், சுவேதா என்ற 17 வயது மகளும் உள்ளனர். அலெக்ஸ் பாண்டியன் முண்டியம்பாக்கம் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயின்று வருகிறார். சுவேதா பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

சவுந்தர பாண்டியனிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்த நிலையில், தினமும் மது அருந்திவிட்டு தகராறு செய்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தினரிடையே அடிக்கடி பல பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம்போல் அதிகளவு மது அருந்திய சவுந்திர பாண்டியன் இல்லத்திற்கு வந்து தகராறு செய்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்துள்ளார். 

பின்னர் மனைவி மற்றும் மகளை வீட்டிற்கு வெளியே அடித்து துரத்திய நிலையில், மனமுடைந்த இருவரும் நெய்வேலியில் இருக்கும் சரளாவின் பெற்றோர் இல்லத்திற்கு சென்றுள்ளனர். இந்த விஷயம் குறித்து அறிந்த அலெக்ஸ் பாண்டியன் வீட்டிற்கு சென்று தந்தையிடம் முறையிடவே, மகன் என்றும் பாராது சவுந்தர பாண்டியன் கடுமையாக தாக்கியுள்ளார். 

இதனால் கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான அலெக்ஸ் பாண்டியன், அருகில் இருந்த கட்டையை எடுத்து சவுந்திரபாண்டியனை அடித்து நொறுக்கவே, சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். சவுந்திரன் பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அலெக்ஸ் பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a drunk father murder by son due to torture


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->