#பெரம்பலூர்: கல்லூரிக்கு எதிரே அழுகி தொங்கிய பிணம்.! குவிந்த மக்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறையூர் சாலையில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இதற்கு எதிரே அறனாரை பெரிய ஏரி ஒன்று அமைந்துள்ளது. அந்த பெரிய ஏரிக்கரையில் இருந்த வேப்பமரம் ஒன்றில் அழுகிய நிலையில் ஒரு ஆணின் பிணம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் காவல்துறையினர் அந்த அழுகிய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்து போன அந்த நபர் அறனாரை அறிஞர் அண்ணா தெருவில் வசித்து வந்த 21 வயது இளைஞர் மதியழகன் என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 11ஆம் தேதி அவரை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு எதிரே உள்ள ஏரியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a dead body found in front of college in perambalur


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->