கன்னியாகுமரி அருகே பரிதாபம்.! குளத்தில் முழ்கி 9 வயது சிறுமி பலி.!
9 year old girl drowned in pond in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் ஜலிலுல்லா. இவரது மகள் ரஹீமா(9). இந்நிலையில் சம்பவத்தன்று ரஹீமா அவரது தாய் சஹினா மற்றும் உறவினர்களுடன் சம்பக்குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்பொழுது சிறுமி ரஹீமா, குளத்தில் குளித்தபோது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து ரஹீமா நீரில் தத்தளிப்பதை பார்த்த உறவினர்கள், உடனடியாக ரஹீமாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ரஹீமா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த ரஹீமாவின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
9 year old girl drowned in pond in kanniyakumari