#JustIn || நேற்று கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் இன்று விடுதலை..!! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் நேற்று மீன் பிடிக்க அந்தோணி என்பவரின் படகில் ஆழ்கடலுக்குச் சென்றனர். அப்பொழுது அவர்கள் பயணம் செய்த படகு பழுதாகியதால் காற்றின் வேகம் காரணமாக நெடுந்தீவு அருகே பாறையில் தரைதட்டி நின்றுள்ளது. அப்பொழுது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வர மீனவர்கள் 9 பேரை கைது செய்ததோடு அவர்கள் பயணம் செய்த படகையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதனை அடுத்து நேற்று கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் ஊர் காவல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தின் விசாரணையில் படகு பழுதான காரணமாக நெடுந்தீவு அருகே ஒதுங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து 9 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஓரிரு தினங்களில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 Rameswaram fishermen released in SriLanka


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->