ஏரியில் மூழ்கி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.!
8 th class student drowned in lake in Chengalpattu
செங்கல்பட்டு மாவட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரவாயல் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியை சேர்ந்தவர் கார் ஓட்டுநர் ராஜாராம். இவரது மகன் பாரதி (13) அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பாரதி நேற்று மாலை ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள ஏரிக்கு குளிப்பதற்காக தனது நண்பர்கள் 3 சென்றுள்ளான்.
அப்பொழுது நண்பர்களுடன் சேர்ந்து குளித்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் மூழ்கி பாரதி மாயமானான். இதைப் பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு உள்ளனர் இவர்களின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அருகில் இருந்தவர்கள் பாரதியை மீட்க தேடினர்.
ஆனால் பாரதி கிடைக்காததால் இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாரதியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் பாரதி மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
8 th class student drowned in lake in Chengalpattu