#கிருஷ்ணகிரி : 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தொழிலாளிக்கு சிறை தண்டனை..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி விரோஜிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி கண்ணன் (56). இவர் 6 வயது சிறுமியை விளையாட அழைத்துச் செல்வதாக கூறி கடந்த 2021ஆம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமி இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 years prison for worker who sexually harassing a 6 year old girl in kirishnagiri


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->