ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை..!! ஒருவர் தற்கொலையா..?? போலீசார் தீவிர விசாரணை..!! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்த புதுபாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனி. கூலித் தொழிலாளியான இவருக்கு வள்ளி என்ற மனைவியும் திரிஷா, பூமிகா, மோனிகா, மஹாலக்ஷ்மி என்ற மகள்களும் சிவசக்தி என்ற மகனும் உள்ளனர். 

இவர்கள் அனைவரும் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த பொழுது பழனியின் மனைவி வள்ளி மகள்கள் திரிஷா, மோனிகா, மகாலட்சுமி மற்றும் மகன் சிவசக்தி ஆகிய ஐந்து பேர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருந்த நிலையில் கிடந்துள்ளனர். மேலும் தூக்கில் தொங்கிய நிலையில் பழனி இறந்து கிடந்துள்ளார். பழனியின் மற்றொரு மகளான பூமிக்கா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பூமிக்காவை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சடலமாக இருந்த ஆறு பேரையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மகனை வெட்டி கொலை செய்துவிட்டு பழனியும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற நோக்கத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் புதுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 members of the same family were hacked to death in tvmalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->