சொந்த ஊருக்கு படையெடுக்கும் பொதுமக்கள் -  தமிழகம் முழுவதும் 580 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வெளியூர் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜனவரி 25-ம் தேதி தைப்பூசம், 26-ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருவதால், சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; "ஜனவரி 25-ம் தேதி தைப்பூசம், 26-ம் தேதி குடியரசு தினம், அடுத்து சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இதை கருத்தில்கொண்டு, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதன் படி, 24, 25- உள்ளிட்ட தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 405 சிறப்பு பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து பிற முக்கிய இடங்களுக்கு 175 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 580 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

580 special bus run in tamilnadu for holiday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->