நடுக்கடலில் தமிழக மீனவர்கள் 5 பேர் மீது கொடூர தாக்குதல்.!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து வங்க கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 5 பேர் மீது கத்தி, கம்பு உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் வேதாரண்யம் மீனவர்கள் தனபால், காளியப்பன், குப்புசாமி, துரை, சிவலிங்கம் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தி இலங்கை கடற்கொள்ளையர்கள் அவர்கள் வைத்திருந்த மீன்பிடி வாலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை பறித்துள்ளனர். 

இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்த தமிழக மீனவர்கள் 5 படகுகளில் சென்று இலங்கை கடற்கொள்ளையர்களை விரட்டி அடித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த மீனவர்களை கரைக்கு மீட்டு வந்து சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் வேதாரண்யம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 TamilNadu fishermen attacked by SriLankans in middle sea


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->