துள்ளிவிளையாடிய மகள், பிணமாக மாறிய விபரீதம்.! சமையலறையில் இருந்த தாய், வெளியில் வந்ததும் அதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை அருகே கல்லாவி பகுதியில் வேடியப்பன்(வயது 30) என்பவர் லாரி டிரைவராக இருந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவியும், இரண்டு வயதில் மகனும், நான்கு மாதத்தில் தேவதர்ஷினி என்ற மகளும் இருந்துள்ளனர். 

நேற்று, வேடியப்பன் வெளியே சென்றுள்ளார். இந்த நிலையில் ஷோபனா வீட்டில் சமைத்து கொண்டு இருந்துள்ளார். சமையல் வேலையை முடித்து விட்டு விளையாடிக் கொண்டிருந்த தேவ தர்ஷினியை தேடியுள்ளார். அப்போது, வீட்டில் தேவதர்ஷினி காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ஷோபனா வீடு முழுவதும் தேடி, பின்னர், அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார். 

தொடர்ந்து, வீட்டின் தண்ணீர்த் தொட்டியை சென்று பார்த்த பொழுது தேவதர்ஷினி அதில் மூழ்கி உயிரிழந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் ஷோபனா கத்தியுள்ளார். 

பின்னர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது என்று தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையின் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நான்கு மாதமே ஆன பெண் குழந்தை திடீரென பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4month baby dead in water tank


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->