ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 4 குடும்பம்.! காரணம் திமுகவா.? - Seithipunal
Seithipunal


பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட நாகதாசம்பட்டி கிராமத்தில் யாரும் திமுகவிற்கு  சுவர் விளம்பரம் செய்ய அனுமதி கொடுக்கக் கூடாது என செல்வகுமார் என்பவர் கூறியிருந்தார். 

ஆனால், பிரகாஷ் என்பவர் வீட்டின் சுவரில் திமுகவுக்கு ஆதரவாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. இதனால் பிரகாஷ் மற்றும் அவரது சகோதரர்கள் என நான்கு பேர் குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட 4 குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை கூறுகின்றனர். 

இந்நிலையில், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் பிள்ளைகள் சுகந்திரமாக ஊரில் விளையாட வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

4 family set aside out of village


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->