மிரள வைக்கும் டெங்கு - புதுக்கோட்டையில் ஒரே நாளில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மிரள வைக்கும் டெங்கு - புதுக்கோட்டையில் ஒரே நாளில் 33 பேர் மருத்துவமனையில் அனுமதி.!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது. இந்த காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இது பொதுமக்களிடயே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் கடந்த ஒரு வாரத்தில் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட நிலையில் இதுவரைக்கும் அந்த மாவட்டத்தில் மட்டும் 130 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மட்டும் காய்ச்சல் காரணமாக 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மக்களிடையே டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

33 peoples admitted hospital for dengue fever attack in putukottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->