#திருச்சி | போட்டிபோட்டு ஓட்டியதால் விபத்து.! 2 அரசு பேருந்துகள் மோதியதில் 30 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு சென்ற இரண்டு அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 30 பேர் காயமடைந்தனர்.

திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளுடன் சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்தும், சாதாரண கட்டண பேருந்தும் புறப்பட்டு சென்றது. அப்போது திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பால்பண்ணை அடுத்துள்ள சஞசீவி நகர் பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற விரைவு பேருந்து திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த சாதாரண கட்டண பேருந்து, விரைவு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியதில் போட்டி போட்டுக்கொண்டு பேருந்துகளை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

30 injured in two government bus collision in Trichy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->