அதிரடி சோதனை: 22 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பெண்கள் கைது - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே மொட்டைப்பாறை முனியாண்டி கோவில் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக சாக்கு மூட்டைகளை கொண்டு வந்த மூன்று பெண்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சந்தேகமடைந்த போலீசார், சாக்கு மூட்டைகளைப் பிரித்து பார்த்த போது கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மானூத்து பகுதியை சேர்ந்த பவுனு தாய், பிரபாவதி, பேச்சியம்மாள் என்பதும், இவர்கள் கஞ்சாவை மலை அடிவார பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்த 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பெண்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 woman arrested for Cannabis selling in madurai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->