லாரி மீது மோதிய கார்... பரிதாபமாய் பலியான மூவர்.. !
3 killed in car crash on truck
சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, கொழுமணிவாக்கத்தை சேர்ந்தவர்கள் சங்கர் (60), இவரது மகன் மகேஷ் (33), அவரின் நண்பர் சின்னராசு (28) ஆகியோர் சபரிமலைக்கு சென்றிருந்தனர். இன்று காலை வீட்டிற்கு அவர்கள் காரில் வீடு திரும்பினர்.
இந்நிலையில், மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சங்கர் மற்றும் சின்னராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயமடைந்த மகேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
3 killed in car crash on truck