கொடைக்கானல் : போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து நாயுடுபுரம் பகுதியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்பொழுது கையில் பையுடன் நின்று கொண்டிருந்த மூன்று பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பாக்கிய புறத்தை சேர்ந்த அந்தோணி ராகுல், ஜெனிபர் மற்றும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த அல்காத் என்பதும், அவர்கள் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்ததுவந்ததும் தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து அவர்களது பையை சோதனை செய்ததில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் 100 கிராம் போதை காளான் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் போதை காளான்களை பறிமுதல் செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 arrested for selling narcotic mushroom and ganja in kodaikanal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->