#BREAKING | விவசாயிகளுக்கு பயிர் கடன் - பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


2023-24ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கூட்டுறவு பயிர் கடன் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவையில், 2023-24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நேற்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்து, உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில், வரும் நிதியாண்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.14,000 கோடி கூட்டுறவு பயிர்க்கடன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வட்டியில்லா கடனாக ரூ.1,500 கோடி பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2023 agriculture budget Rs 14 thousand crore cooperative crop loan will be provided farmer


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->