ஈரோடு : 2 மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து - 2 இளைஞர்கள் பலி - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் தேவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மயில்சாமி இவரது மகன் கவுதம் (23). இவரும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் மகனான சந்தோஷ் (22) ஆகிய இரண்டு பேரும் நேற்று மாலை புஞ்சைபுளியம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

அப்பொழுது பாறைபுதூர் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும், இவர்களது மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட கவுதம் மற்றும் சந்தோஷ் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 youths killed in motorcycles accident in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->