வேலூர் || ரயில் மோதி இருவர் பலி, காவல்துறையினர் விசாரணை..!
2 persons Death in vellore
ரயில் மோதி இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், மேல்பட்டி வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கிடையே உள்ள தண்டவாளத்தை 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது, ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரயில் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே போலலத்தேரி காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 45 வயது உடையவர் தண்டவாளத்தை கடக்கும் எதிர்பாராத விதமாக ரயில் மோதி பலியானார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
2 persons Death in vellore