#கிருஷ்ணகிரி : மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 2 பேர் பலி, 2 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தடிகல் பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி. இவரது மகன் நாகராஜ் (25). இவர், அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான நாகேந்திரன், மற்றும் நாகராஜ் ஆகிய இரண்டு பேருடன் நேற்று தேன்கனிக்கோட்டையில் இருந்து தடிகல் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்பொழுது பெங்களூருவை சேர்ந்த புகைப்பட கலைஞரான நவ்ரோஸ் (80) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் தீர்த்தகிரி மகன் நாகராஜ் மற்றும் நவ்ரோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த மற்றொரு நாகராஜ் மற்றும் நாகேந்திரன் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு இருவரும் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed and 2 injured in Motorcycles collision in kirishnagiri


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->