மீன் பிடிக்க சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.. திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த சோகம்..! - Seithipunal
Seithipunal


மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆண்டியப்பனூர் பகுதியைச்சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு திருமணமாகி உதயகுமார் (11) மற்றும் பிரபாகரன் (9)  இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மீன்பிடிப்பதற்காக  அங்குள்ள ஏரிக்கு சென்றனர்.

அப்போது, ஏரியில் சகதியில் சிக்கியுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள்  அவர்களை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சிறுவர்கள் உடலை மீட்டனர்.

சிறுவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 brothers Death in Thiruppathur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->