தமிழகத்தில் வேகமாக பரவும் டெங்கு! தி.மலை, கடலூர், புதுக்கோட்டையில் 15 பேருக்கு தொற்று உறுதி! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது மாவட்ட முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்களுக்கும் அடங்குவர். கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு சிகிச்சைக்கு என தனி வார்டு இல்லாததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

எனவே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்குமாறு பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை ஒட்டிய புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்லூரி மாணவியும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தர்மபுரியை சேர்ந்த பெண்ணும் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

15 people diagnosed with dengue fever in TamilNadu


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->