14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்!
14 districts rain warning
தென் இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வட தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழை காலை 10 மணி வரை நீட்டிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சென்னை, திருவள்ளூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
14 districts rain warning