12ம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஆங்கில பாடத்தேர்வில் 49,000 பேர் ஆப்சென்ட்.!
12th public exam English paper 49,000 students absent
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணைபடி 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23,747 பேரும் என மொத்தம் 8,75,050 பேர் எழுத இருந்தனர். இதனையடுத்து 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3225 இடங்களில் இதற்காக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வான ஆங்கில மொழித்தேர்வை 49,000 மாணவர்கள் எழுதவில்லை என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மார்ச் 13ஆம் தேதி நடைபெற்ற தமிழ் மொழி தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ் மொழி தேர்வை எழுதாத மாணவர்கள் இன்றைய தினம் நடைபெற்ற ஆங்கில மொழி தேர்வையு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
English Summary
12th public exam English paper 49,000 students absent