சென்னையில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை! - Seithipunal
Seithipunal


சென்னையில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை செய்த நபருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபநாட்களாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் போதை பொருள் பயன்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தற்போது, தலைநகர் சென்னையில் போதை மாத்திரைகள் அதிகஅளவில் புழக்கத்தில் வந்துள்ளது. போதை பொருள்களை ஒழிக்கும் நடவடிக்கையில் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகினறனர். 

சென்னை தாண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற மாங்கா சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து  2 கிலோ கஞ்சா, 1260 போதை மாத்திரைகள் பறிமுதல். இந்த வழக்கை விசாரணை சென்னை போதைப் பொருள் கடத்தல் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி போதைப்பொருள் விற்பனை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அடுத்து அவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

12 years imprisonment for a person who sold cannabis and drugs in Chennai


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->