11ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. திருவண்ணாமலையில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்..!
11th grade student Sexually abused in Thiruvannamalai
பதினோராம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் பதினொன்றாம் வகுப்பு மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்நிலையில் திடீரென அவர் மயங்கி விழுந்ததால் அவரது பெற்றோர் அங்கு இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 3பாதம் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மாணவியை மீட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த மாணவியை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து தனது நண்பர்களிடம் பகிர்ந்து தெரியவந்தது. இதனிய அடுத்து அந்த வாலிபரின் நண்பர்கள் மூவர் இந்த வீடியோவை காட்டி மாணவி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
11th grade student Sexually abused in Thiruvannamalai