காட்டு யானை தாக்கி சிறுவன் படுகாயம்.. பழனி அருகே நிகழ்ந்த சோகம்..!
10 years old boy injured
10 வயது சிறுவன் காட்டுயானை தாக்கி படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பெரியகோட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அவரது பத்து வயது மகனுடன் அவரது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த காட்டு யானை ஒன்று எதிர்பாராத விதமாக சிறுவனை தாக்கியது.
இதில், படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பழனி வனத்துறை காவலர்கள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுயானை தாக்கி சிறுவன் படுகாயம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.