ரயில்வே கேட் அருகே.. விளையாட்டால் நிகழ்ந்த விபரீதம்! 10 மாணவர்களுக்கு நேர்ந்த கதி.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பெத்தாங்குப்பம் கிராம் வழியாக செல்லும் ரயில்வே பாதை வழியாக ரயில் செல்லும் போது கேட் மூடப்பட்டதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. 

அப்போது தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பள்ளி பேருந்தில் இருந்த குழந்தைகள் விளையாட்டாக பேருந்து ஹான்ட் பிரேகை நீக்கி உள்ளனர். இதனால் பள்ளி பேருந்து பின்னோக்கி நகர்ந்து அருகில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் பள்ளி பேருந்தில் இருந்த 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பள்ளி மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பெத்தாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 students injured in school bus accident in Cuddalore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->