தமிழகத்தில் 10 மாடுகள் உடல் நசுங்கி பலி..ஸ்ரீபெரும்புதுார் அருகே பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


படப்பை அருகே நெடுஞ்சாலையில் படுத்திருந்த 10 மாடுகள் மீது கனரக வாகனம் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் படப்பை அருகே வண்டலூர் வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் 15 மாடுகள் நேற்று படுத்திருந்தது. இந்த நிலையில் அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் 10 மாடுகள் உடல் நசுங்கி அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, இறந்த மாடுகளை பக்கத்தில் இருந்த பொதுமக்கள் சாலையில் இருந்து அகற்றினர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

10 cows died in padappai Highway


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->