மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்க்க சென்ற மாணவனுக்கு நிகழ்ந்த சோகம்..!
+1 Student Death Near Sivakangai
மஞ்சு விரட்டில் காளை முட்டியதில் +1 மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை கிராமத்தில் பிங்கல் பண்டிகையோட்டி ஆண்டுதோறும் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். இந்தாண்டும் அதே போல மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அந்த பகுதியை சேர்ந்தவர் வேடிக்கைகள் பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக காளை ஒன்று பார்வையாளர்கள் கூட்டத்தில் நுழைந்தது. அதில், பாலாஜி என்பவர் மீது காளை முட்டியது. இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்ததை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
+1 Student Death Near Sivakangai