தென்னாப்பிரிக்கா அணியை திணற வைக்கப்போகும் வீரர் இவர்தான்.! முன்னாள் வீரர் நம்பிக்கை.!! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது.

தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் இல்லை என்பதால் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது .அதுபோல ரோகித் சர்மா, ஜடேஜா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாத இந்தியா அணி தென்னாப்பிரிக்காவை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹிர் கான் கூறியதாவது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சமீப காலமாக தொடர்ந்து மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிநாடு தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகின்றது. 

நமது வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக பந்து வீச முடியும். தேவைக்கு ஏற்ப பவுன்சரும் சிறப்பாக முடியும். வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் கூட குறை சொல்ல முடியாது. இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் என அனைவருமே தங்களது பங்களிப்பை தொடர்ந்து சரியாக செய்து வருகின்றனர். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா தொடரில் ஜஸ்பிரித் பும்ரா தான் உலகின் சிறந்த தலைசிறந்த பந்து வீச்சாளர் என்பதை நிரூபிப்பார் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

zaheer khan says about ind vs sa test match


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->