அரையிறுதிக்கு முன்னேறப்போவது யார்.? இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் இடையே கடும் போட்டி.! - Seithipunal
Seithipunal


ஐசிசி 8வது டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில், தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலக கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில் குரூப்-1 பிரிவு சூப்பர் 12 போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தது. இதில், நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 7 புள்ளிகளை பெற்றிருந்தது. ஆனால், நெட் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளது‌.

அதனைத் தொடர்ந்து குரூப் 2 பிரிவு சூப்பர் 12 சுற்று போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் நாளை நடைபெறும் 3 போட்டிகளை பொறுத்து தான் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நாளை காலை 5.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

அதனைத் தொடர்ந்து காலை 9.30  மணிக்கு அதே மைதானத்தில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

அதனைத் தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு மெல்போர்ன் மைதானத்தில் இந்தியா - ஜிம்பாவே அணிகள் மோதுகின்றன.

அந்த வகையில் கடைசி லீக் போட்டியில் இந்தியா ஜிம்பாபே அணியையும், தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தையும் வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. 

இறுதி லீக் போட்டியில் இந்தியா ஜிம்பாபே அணியிடம் தோல்வியடைந்து, தென்னாப்பிரிக்கா அணி நெதர்லாந்தை வீழ்த்தி, பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தினால், இந்தியா, பாக்கிஸ்தான் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் இருக்கும் போது, ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் தகுதி பெறும். இந்தியா வெளியேறும்.

அதே சமயம் இந்தியா ஜிம்பாபே அணியை வீழ்த்தி, பாகிஸ்தான் பங்களாதேஷை வீழ்த்தி, நெதர்லாந்து தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால் இந்தியா, பாகிஸ்தான் அரையிறுதி செல்லும், தென்னாப்பிரிக்கா வெளியேறும்.

மழையும் யார் செல்ல வேண்டும் என்பதில் முக்கிய பங்காற்றும். இந்தியா ஜிம்பாபே ஆட்டம் தடைபட்டாலும் அரையிறுதி செல்லும், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆட்டம் தடைபட்டால் பாகிஸ்தான் வெளியேறும்.

தென்னாப்பிரிக்கா நெதர்லாந்து ஆட்டம் தடைப்பட்டு, பாகிஸ்தான் பங்களாதேஷை மிகப்பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினால், ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதி செல்லும். தென்னாப்பிரிக்கா வெளியேறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup group 2 who will qualify semifinal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->