இவரை விட வேறு ஒருவரை நினைத்து பார்க்க முடியாது..கேப்டன் ஜடேஜாவுக்கு, சுரேஷ் ரெய்னா வாழ்த்து! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனான ரவீந்திர ஜடேஜாவுக்கு முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 15வது சீசன் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பயிற்சியை தொடங்கிவிட்டது. வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் அணியில் இணைந்தார். இருப்பினும் சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளராக கருதப்படும் தீபக் சஹார் ஏப்ரல் மாதத்தில்தான் அணியில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்" என்று தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரவிந்திரா ஜடேஜா பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா ஜடேஜாவுக்கு ட்விட்டரில் "சென்னை போன்ற அணியின் கேப்டன் பொறுப்புக்கு இவரை விட சிறந்தவராக வேறு ஒருவரை நினைத்து கூட பார்க்க முடியாது; என் சகோதரர் ஜடேஜாவுக்கு வாழ்த்துக்கள்! என பதிவிட்டுள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Suresh Raina wishes to CSK captain ravindra jadeja


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->