T20Worldcup : பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி.. மகிழ்ச்சியில் துள்ளி குதித்த முன்னாள் இந்திய வீரர்கள்.!
Sunil Gavaskar celebrate in ground IND vs PAK Match
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 லீக் சுற்றில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பந்து வீசியது. ஆட்டத்தில் முதல் பந்திலேயே கேப்டன் பாபர் அசாம் டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவரை தொடர்ந்து ரிஸ்வானை 4 ரன்னில் அவுட்டாக்கினார். தொடர்ந்து ஷான் மசூத், இப்திகார் அகமது ஜோடி சேர்ந்து றன் குவிப்பில் ஈடுபட்டனர். இதில், இப்திகார் அகமது 34 பந்தில் 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ஷான் மசூத் 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றது.
இந்திய அணி தரப்பில், விராட் கோலியின் அதிரடி ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் மைதானத்தில் போட்டியை ரசித்த இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், இர்ஃபான் பதான் ஆகியோர் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Sunil Gavaskar celebrate in ground IND vs PAK Match