இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட டேல் ஸ்டெய்ன்! நடந்தது என்ன?!
southafrican Pacer steyn said apologies to Indian cricket fans
தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீரர் டேல் ஸ்டெய்ன், கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார். ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஐ.பி.எல். போட்டியில் இருந்து இந்த வருடம் மட்டும் விலகுவதாக ஸ்டெய்ன் அறிவித்திருந்தார். அதே சமயம் உலகில் நடைபெறும் மற்ற லீக் போட்டிகளில் விளையாட இருப்பதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் பணத்துக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கிரிக்கெட் பின்னால் சென்று விட்டது. ஒவ்வொரு அணியிலும் அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் இருக்கிறார்கள். அதில் அதிக அளவில் பிரபல வீரர்கள் உள்ளனர். அவர்கள் போட்டியின் மூலம் ஈட்டும் பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது என்று ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். அதே சமயம் பாகிஸ்தான்,ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்களில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் இருப்பதாக கூறியுள்ளார்.
இதற்கு இந்திய ரசிகர்களிடம் கடுமையான எதிர்ப்பு எழவே, நான் அப்படி சொல்லவில்லை, தவறாக புரிந்து கொண்டிருக்கிறது. யாராவது மனம் புண்பட்டு இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
southafrican Pacer steyn said apologies to Indian cricket fans