மூன்றாம் இடத்தில் வாஷிங்டன் சுந்தரை அனுப்புவது ஆபத்து… தெளிவாக எச்சரிக்கும் தினேஷ் கார்த்திக் - Seithipunal
Seithipunal


இந்தியா–தென்னாப்பிரிக்கா இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் முடிந்தது. இதில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரின் தொடக்கத்திலேயே பின்னடைவை சந்தித்தது.

இந்தப் போட்டியில் மூன்றாம் இடத்தில் விளையாடி வந்த சாய் சுதர்சன் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.

முழுநேர பேட்ஸ்மேனின் இடத்தில் ஒரு பௌலிங் ஆல்ரவுண்டரை அனுப்புவது பொருத்தமா என்ற கேள்வி எழுந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் இதுகுறித்து கவலை தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் ஒரு பௌலிங் ஆல்ரவுண்டர் தான், பேட்டிங் ஆல்ரவுண்டர் அல்ல என்பதைக் கூறிய அவர், மூன்றாம் இடத்தில் தொடர்ந்து களமிறங்குவது சுந்தரின் வளர்ச்சிக்கு பாதகமாக அமையும் என விளக்கினார். மூன்றாம் இடத்தில் விளையாடும் பொறுப்பு மிகப்பெரிய அழுத்தத்தை உருவாக்கும்; அதற்காக சுந்தர் அதிகமாக பேட்டிங் பயிற்சியில் கவனம் செலுத்தினால், அவரது பந்துவீச்சுத் திறனில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உண்டு என்றும் கார்த்திக் சுட்டிக்காட்டினார்.

அணிக்கும், சுந்தரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் அவர் பின் வரிசை ஆல்ரவுண்டர் என்ற நிலையைத் தொடர்வதே சிறந்தது என்று தினேஷ் கார்த்திக் தெளிவாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sending Washington Sundar at number three is dangerous Dinesh Karthik clearly warns


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




சினிமா

Seithipunal
--> -->