சாம் கரணை இழந்த சிஎஸ்கே.. ஐபிஎல் வரலாற்றில் அதிகப்பட்ச தொகை.. எந்த அணிக்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு சாம் கரணை பஞ்சாப் கிங் அணி வாங்கியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் தற்போது கொச்சியில் நடைபெற்று வருகிறது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரண் ரூ.18.5 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோல் ஹாரி ப்ரோக்கை ரூ.13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ரூ.18.5 கோடிக்கு சாம் கரணை பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்;

18.25 கோடி - சாம் கரண் (பஞ்சாப் கிங்ஸ்) - 2023*
16.25 கோடி - கிறிஸ் மோரிஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 2021
16 கோடி - யுவராஜ் சிங் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) - 2015
15.5 கோடி - கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) - 2020
15.25 கோடி - இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்) - 2022
15 கோடி - ஜேமிசன் (ஆர்சிபி)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sam Curran highest paid player in IPL history


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->