இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகிய ரோகித் சர்மா? காரணம் இது தானாம்.! - Seithipunal
Seithipunal


இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில், ரோகித் சர்மா விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியின் முன்னனி ஆட்டக்காரரும் துணை கேப்டனுமான ரோகித் சர்மா, டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் என மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் உலக்கோப்பை போட்டியிலிருந்து தொடர்ச்சியாக விளையாடிவருகிறார்.

இந்நிலையில், இலங்கை அணி வரும் ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வந்து மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியா-இலங்கை இடையே நடைபெறும் இந்த தொடரிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவின் விருப்பத்தின் பேரில் அவருக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rohit sharma take rest in srilanka league


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->