சிக்ஸரில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா.! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக 200 சிக்ஸர் அடித்து ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

15வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் அணியுடன் மும்பை அணி மோதியது. இதில் 28 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 43 ரன்களை ரோஹித் சர்மா எடுத்தார்.

இவர் முதல் சிக்சர் அடித்த போது அது மும்பை அணிக்காக அவர் அடித்த 200 வது சிக்சர் ஆகும். மும்பை அணியின் பொல்லார்ட் 257 சிக்சர்கள் விளாசி உள்ளார். இதனையடுத்து மும்பை அணிக்காக 200 சிக்சர்கள் அடித்த இரண்டாவது வீரர் ஆனார் ரோஹித் சர்மா.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 200 சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா 5 வது இடத்தில் உள்ளார்.

விராட் கோலி, ஏ.பி.டிவில்லியர்ஸ், கிரிஸ் கெய்ல் ஆகியோர் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 200 சிக்சர்களுக்கு மேல் அடித்த மற்ற வீரர்கள் ஆவார்கள். மேலும் குஜராத் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma new record in IPL Cricket


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->