வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட்.. இந்திய அணியின் முக்கிய வீரர்கள் விலகல்.! - Seithipunal
Seithipunal


வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதல் முதலில் நடைபெற்ற 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இதில், வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில்  1-0 என முன்னிலையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மிர்பூரில் டிசம்பர் 22  தொடங்குகிறது.

இந்த நிலையில் ஒருநாள் தொடரில் ஃபீல்டிங் செய்தபோது கேப்டன் ரோஹித் சர்மாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை. இதனையடுத்து கேஎல் ராகுல் கேப்டனாக செயல்பட்டார். காயத்துக்காக மும்பையில் சிகிச்சை பெற்று வந்த ரோஹித் சர்மா, 2-வது டெஸ்டிலிருந்தும் விலகியுள்ளார். இதையடுத்து கடைசி டெஸ்டிலும் கே.எல். ராகுல் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.

அதேபோல், வயிற்று தசைப்பிடிப்பு காரணமாக வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனியும் 2வது டெஸ்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.  

 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: 

கே.எல்.ராகுல் (கே), ஷுப்மான் கில், புஜாரா (து.கே), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ), கே.எஸ்.பாரத் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர்,  முகமது  சிராஜ், உமேஷ் யாதவ், அபிமன்யு ஈஸ்வரன், சௌரப் குமார், ஜெய்தேவ் உனத்கட்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rohit Sharma and navdeep Saini ruled out last test against Bangladesh


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->