சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகல்.. புதிய கேப்டன் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளதாக அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் 15வது சீசன் வருகின்ற மார்ச் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் அணியாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பயிற்சியை தொடங்கிவிட்டது. வீரர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே காயத்தால் அவதிப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் அணியில் இணைந்தார். இருப்பினும் சென்னை அணியின் முக்கிய பந்து வீச்சாளராக கருதப்படும் தீபக் சஹார் ஏப்ரல் மாதத்தில்தான் அணியில் இணைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravindra jadeja new CSK captain of ipl 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->