திடீரென அணியில் இருந்து விலகிய அஸ்வின்: வெளியான அதிர்ச்சி தகவல்!
Ravichandran Ashwin withdraws team
இந்தியா-இங்கிலாந்து அணி இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்ற வரும் நிலையில் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்த தகவலை பி.சி.சி.ஐ நேற்றிரவு அறிவித்தது. மேலும், அஸ்வின் குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியில் இருந்து விலகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணியிலிருந்து விலகிய அஸ்வினுக்கு தேவையான அனைத்து உதவிகளை கிரிக்கெட் வாரியம் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளபதியில், குடும்பத்தில் மருத்துவ அவசரம் காரணமாக ரவீந்திரன் அஸ்வின் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளார். இந்த சமயத்தில் பி.சி.சி.ஐ மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பும் அஸ்வினுக்கு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Ravichandran Ashwin withdraws team