#IPL2022 : சென்னையை வீழ்த்தி.. ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.!
Rajasthan royals won by 5 wickets against Chennai super kings
நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அபாரமாக விளையாடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்தார்.
ராஜஸ்தான் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹல், மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதனைத்தொடர்ந்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 59 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 40 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
English Summary
Rajasthan royals won by 5 wickets against Chennai super kings